மணிப்பூர் மாநிலத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு

 
Manipur

வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் நீண்ட நாட்களுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 

மணிப்பூரில் குகி பழங்குடியின சமூகத்திற்கும், மெய்தி இன மக்களுக்கும் கடந்த மே மாதம் தொடக்கம் முதலே மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த மோதல் வன்முறையாக மாறிய நிலையில், அந்த மாநிலமே போர்க்களமாக காட்சி அளித்து வருகிறது. வன்முறையால் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் காயம அடைந்துள்ளனர். ஏராளமான பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. கடந்த நில நாட்களுக்கு முன்னர் பழங்குடியினத்தை சேர்ந்த இரண்டு பெண்களை மெய்தி சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் நிர்வாணமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ வெளியானது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.  மணிப்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக மூன்று ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்ட விசாரணை குழுவை நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், மணிப்பூரில் நீண்ட நாட்களுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளனர். அமைதி திரும்ப பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், அங்கு படிப்படியாக இயல்புநிலை திரும்பி வருகிறது. இந்த நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் முதல் கட்டமாக 9,10,11,12ம் வகுப்புகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.