கேரளா படகு விபத்து - மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை!

 
Kerala

கேரளா படகு விபத்து தொடர்பாக அம்மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தானூர் நகராட்சி பரப்பனங்காடி பகுதியில் உள்ள கடற்கரையில், 50க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற படகு பாரம் தாங்காமல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 23 ஆக அதிகரித்துள்ளது. நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணி தீவிரம் அடைந்துள்ள நிலையில்  உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி, தலா ₹2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா , காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளது.  கேரளா படகு விபத்து தொடர்பாக நீதி விசாரணை நடத்த உத்தரவிட்டு இருப்பதாகவும், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது.