அருணாச்சல பிரதேசத்தில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் - மக்கள் பீதி
அருணாச்சல பிரதேச மாநிலம் மேற்கு கமெங் மாவட்டத்தில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர்.
அருணாச்சல பிரதேச மாநிலத்தின் மேற்கு கமெங் மாவட்டத்தில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. சரியாக இன்று காலை 6:34 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவாகியுள்ளதாக தேரிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் 33 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்களில் அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த மக்கள் உடனடியாக தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த லேசான நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.