இலகுரக வாகன ஓட்டுனர் உரிமமே போதுமானது - உச்சநீதிமன்றம் உத்தரவு!
7500 கிலோ எடைக்குள் இருக்கும் போக்குவரத்து வாகனத்தை இயக்க, இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பவர்களை அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து வாகனங்களை, இலகுரக வாகன ஓட்டுனர் உரிமத்தை கொண்டே இயக்க அனுமதி அளிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில், நீதிபதிகள் ஹிருஷிகேஷ் ராய், பிஎஸ் நரசிம்ஹா, பங்கஜ் மித்தல், மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது.
இந்த நிலையில், 7500 கிலோ எடைக்குள் இருக்கும் போக்குவரத்து வாகனத்தை இயக்க, இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பவர்களை அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 7500 கிலோவுக்கு மேல் உள்ள வாகனங்களை இயக்கும் போது மட்டுமே, போக்குவரத்து வாகனங்களுக்கு உரிய விதிமுறைகள், நிபந்தனைகள் பொருந்தும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


