ஓட்டு போட யமஹா பைக்கில் வந்த முதல்வர்!!

 
tn

இந்தியாவின் 18 வது மக்களவைப் பொதுத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்படுகிறது.  இதில் முதல் கட்டமாக தமிழக மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகள் மற்றும் 19 மாநிலங்களில் உள்ள 62 தொகுதிகள் என மொத்தம் 12 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கிய நடைபெற்ற வருகிறது.

tn

அத்துடன் தமிழகத்தில் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலும் இன்று நடத்தப்படுகிறது தமிழகத்தை பொறுத்த வரை 39 மக்களவைத் தொகுதி மற்றும் விலங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

tn

இந்நிலையில் புதுச்சேரி திலாசுப்பேட்டை பகுதியில் உள்ள அரசு ஆண்கள் நடுநிலைப்பள்ளி அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் முதலமைச்சர் ரங்கசாமி  இன்று தனது வாக்கினை பதிவு செய்தார்.  வாக்கு செலுத்துவதற்காக ரங்கசாமி வீட்டில் இருந்து வாக்குச்சாவடிக்கு தனது காரில் செல்வதற்கு பதிலாக தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். யமஹா ஆர் எக்ஸ் 100 பைக்கில் வந்த முதல்வர்  ரங்கசாமி, தனது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.