புது மாப்பிள்ளையை கொன்ற கல்யாணப்பரிசு! புதுப்பெண்ணின் மாஜி காதலன் சிக்கினான்

 
ஹ்

தன்னுடனான காதலை மறந்துவிட்டு வேறொருவரை திருமணம் செய்துகொண்டதால்  ஹோம்தியேட்டரில் வெடிபொருள் நிரப்பி  கல்யாண பரிசளித்திருக்கிறார்.  அந்த பெண்ணின் மாஜி காதலன். அது வெடித்து புதுமாப்பிள்ளையும் அவரது அண்ணனும் உயிரிழந்துள்ளனர்.  அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 சத்தீஸ்கர் மாநிலத்தில் கபீர்தம் மாவட்டம்.  இம் மாவட்டத்தில் சாமரி பகுதியைச் சேர்ந்தவர் ஹேமந்திரா.   22 வயதான இந்த இளைஞருக்கு கடந்த 1ம் தேதி அன்று தான் திருமணம் முடிந்தது.  திருமணத்தின் போது மணமக்களுக்கு ஏராளமான பரிசுப் பொருட்கள் தரப்பட்டிருக்கின்றன.  திருமணம் முடிந்ததும் மணமக்கள் இருவரும் தங்களுக்கு வந்த கல்யாணப் பரிசுகளை ஒவ்வொன்றாக பிரித்து பார்த்திருக்கிறார்கள்.  அதில் ஹோம் தியேட்டர் எனப்படும் டிவியுடன் பொருத்தக்கூடிய சாதனம் இருந்திருக்கிறது. 

த்

 அதை ஹேமந்திரா தன் வீட்டில் பொறுத்தி இருக்கிறார்.  அப்போது எதிர்பாராத விதமாக அது வெடித்து சிதறி இருக்கிறது.  இந்த விபத்தில் அறையின் மேற்கூரை இடிந்து விழுந்து சுவரும் தரைமட்டமாகி இருக்கிறது.  ஹோம் தியேட்டர் வெடித்து சிதறியதில் ஹேமந்திரா தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.  அப்போது வீட்டில் இருந்த ஹேமந்த்ராவின் மூத்த சகோதரர் ராஜ்குமார் என்கிற முப்பது வயது வாலிபரும்,  ஒன்றரை வயது குழந்தை உட்பட நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஹேமந்த்ராவின் மூத்த சகோதரர் ராஜ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்த போது அந்த பரிசுப் பொருளில் வெடிபொருள் நிரப்பப்பட்டிருந்தது தெரிய வந்திருக்கிறது.  இதை அடுத்து திருமண வரவேற்பில் கலந்து கொண்டவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர்.   இப்போதுதான் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சர்ஜூ மார்கம் என்கிற 33 வயது வாலிபர் மணமக்களுக்கு ஸ்பீக்கரை பரிசாக கொடுத்தது தெரியவந்திருக்கிறது .

அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.   போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தான்,  ஹேமந்த்ரா  மனைவியும் மார்கமும் காதலித்து உள்ளனர். மார்கம் திருமணமானவர் என்பதை தெரிந்து கொண்டதால்  அவருடன் பழகுவதை நிறுத்தி இருக்கிறார்.  இந்த நிலையில் தான்  பெற்றோர் அவருக்கு வரன் தேடி திருமணம் செய்து கொடுத்துள்ளனர் . இதனால் ஆத்திரமடைந்த மார்கம்  மற்றும் அவரது கணவரை பழிவாங்க திட்டமிட்டு இருக்கிறார் .

திருமண வரவேற்பில் கலந்து கொண்டு வெடிபொருள் நிரப்பிய ஸ்பீக்கரை அவர்களுக்கு பரிசாக கொடுத்திருக்கிறார்.  முன்னாள் காதலன் செய்த இந்த செயலால் புது மாப்பிள்ளையுடன்   சேர்ந்து அவரது அண்ணனும் பலியாகி இருப்பது உறவினர்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.