திருமண தேதியை மறந்ததால் வாழ மறுத்த மனைவி! குடும்பத்துடன் சேர்ந்து கணவருக்கு அடி, உதை

 
aa

திருமண தேதியை  மறந்து வேலைக்கு சென்றதால் குடும்பத்தினரை வரவழைத்து கணவரை அடித்து உதைத்து இருக்கிறார் மனைவி . அது மட்டுமல்லாமல் இனி மேல் கனவுகளுடன் சேர்ந்து வாழ மாட்டேன் என்றும்  சொல்லிவிட்டு பிறந்த விட்டிருக்கே சென்றிருக்கிறார்.  மும்பையில் நடந்திருக்கிறது இந்த சம்பவம். 

 மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை அடுத்த பைகன்வாடி.  இப்பகுதியைச் சேர்ந்தவர் விஷால் நாங்கிரே.   இவரின் மனைவி கல்பனா.  கடந்த 2018 ஆம் ஆண்டில் பிப்ரவரி 18ஆம் தேதி அன்று தம்பதிக்கு திருமணம் நடந்திருக்கிறது.

kk

 இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி அன்று திருமண நாள் அன்று,    கணவன் தனக்கு திருமண பரிசு கொடுப்பார் என்று காத்திருந்திருக்கிறார் கல்பனா. ஆனால் திருமண நாளை மறந்த விஷால்,  வழக்கம் போல் வேலைக்கு சென்று இருக்கிறார்.   இதனால் ஆத்திரமடைந்து கணவனிடம் சண்டை போட்டு இருக்கிறார்.  அதற்கு அடுத்த நாளும் வேலை முடித்துவிட்டு வந்து வீட்டிற்கு வெளியே தனது வாகனத்தை விஷால் கழுவிக் கொண்டிருந்திருக்கிறார் .   இதில் மேலும் ஆவேசம் அடைந்த கல்பனா தன் குடும்பத்தினருக்கு ஃபோன் போட்டு விவரத்தை சொல்லி வரவழைத்திருக்கிறார்.  

 தனது தாய் , சகோதரர்கள் வந்ததும் கணவனை அனைவரும் சேர்ந்து அடித்து உதைத்து இருக்கிறார்கள்.  பின்னர் அங்கிருந்து கணவரின் தாயார் வீட்டிற்கு சென்று அங்கேயும் இது குறித்து வாக்குவாதம் நடத்தி சண்டை போட்டு இருக்கிறார்கள்.   இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்று அப்போது மாமியார் கல்பனாவின் கன்னத்தில் அடித்திருக்கிறார்.  இதில் பிரச்சனை பெரிதாகி இருக்கிறது.

 உடனே,  இனி விஷால் உடன் ஒன்றாக வாழ முடியாது என்று சொல்லி இருக்கிறார்.  சொல்லிவிட்டு பிறந்த வீட்டிற்கே சென்றிருக்கிறார் கல்பனா.   இதன்பின்னர் விஷால்,  தனது மனைவி மற்றும் அவரது தாய் சகோதரர் ஆகியோர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.   வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.