ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

 
kashmir

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

ஜம்மு-காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள திக்வார் பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு ரகசிய தகவ்ல் கிடைத்தது. இதனையடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட தொடங்கினர். இதனை சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படை வீரர்கள் உடனடியாக பதுங்கி, பின்னர் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் எந்த பயங்கரவாத குழுவை சேர்ந்தவர்கள், வேறு யாராவது அந்த இடத்தில் பதுங்கி உள்ளனரா என பாதுகாப்பு படை வீரர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் ஜம்மு-காஷ்மிரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள ஹாலன் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்களுக்கு இடையே நடந்த மோதலில் 3 ராணுவ வீரரகள் வீரமரணம் அடைந்தது குறிப்பிடதக்கது.