மத்திய அமைச்சரின் கார் மீது முட்டை வீச்சு
மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஷ்ராவின் கார் மீது இந்திய தேசிய மாணவர் காங்கிரஸ் அமைப்பினர் முட்டைகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒடிசாவின் கட்டாக்கில் நடைபெற்ற விழாவில் பங்கேற்பதற்காக நேற்று மத்திய இணை அமைச்சர் அஜய் மிஷ்ரா புவனேஸ்வர் சென்றார். விமான நிலையத்திற்கு வெளியே வந்து அவர் காரில் சென்ற போது காரின் மீது முட்டை வீசப்பட்டது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசாரின் விசாரணையில் முட்டை வீசியவர்கள் இந்திய தேசிய மாணவர் காங்கிரஸ் அமைப்பினர் என்று தெரியவந்தது.
உத்தரபிரதேச மாநிலத்தில் லக்கிம்பூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் நடந்த வன்முறை சம்பவத்தில் ஆஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா குற்றச்சாட்டப்பட்டிருக்கிறார். இதன் காரணமாகவே அஜய் மிஸ்ராவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து முட்டை வீச்சு சம்பவம் நடந்தது தெரியவந்தது.
மூட்டை வீசிவிட்டு அமைச்சருக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். போலீசாரும், பாதுகாப்பு படையினரும் ஆர்ப்பாட்டக்காரர்களை அப்புறப்படுத்திவிட்டு, தீவிரமாக முழக்கம் எழுப்பி மேலும் மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து சென்றனர்.
இந்த சம்பவத்தினால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.