மணிப்பூரில் தொடரும் பதற்றம்! மத்திய அமைச்சரின் வீட்டிற்கு தீ வைப்பு

 
fire

மணிப்பூரில் மத்திய அமைச்சரின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மேதேயி சமுதாய மக்கள் பட்டியலின அந்தஸ்து கோரி போராடி வருகின்றனர். இதனையடுத்து இதுகுறித்து மத்திய அரசுக்கு பரிந்துரைக்குமாறு மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.  அதன்படி மைதேயி சமுக மாணவர் சங்கம் சார்பில் கடந்த 3ம் தேதி பேரணி நடைபெற்றது.  இந்நிலையில், மைதேயி சமூகத்தினரை பட்டியலின பிரிவில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் நடத்திய பேரணிக்கு எதிராக குகி பழங்குடியினரும் பேரணி நடத்தினர். இதில், இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அது வன்முறையாக வெடித்தது. அப்போது ஏற்பட்ட மோதலில் வெடித்த வன்முறை மாநிலம் முழுவதும் பரவியது.  இந்தக் கலவரத்தில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  இதையடுத்து, ராணுவம், அசாம் ரைபிள்ஸ் படையினர், சிஆர்பிஎப் வீரர்கள் வர வழைக்கப்பட்டு வன்முறை கட்டுப்படுத்தப்பட்டது. இதனிடையே நேற்று மீண்டும் அங்கு வன்முறை வெடித்தது.

இந்நிலையில், தலைநகர் இம்பாலில் உள்ள மத்திய அமைச்சர் ஆர்.கே.ராஜன் சிங்கின் வீட்டை கலவரக்காரர்கள் தீ வைத்து எரிந்தனர். ஆர்கே ராஜனின் வீட்டிற்கு 1000க்கும் மேற்பட்டோர் கும்பலாக வந்து வீட்டை தீ வைத்து எரித்தனர். இந்த சம்பவத்தின் போது ஆர்கே ராஜன் வீட்டில் இல்லை. இதனால் உயிர் இழப்பு தவிர்க்கப்பட்டது. தாக்குதல் நடந்த சமயத்தில் மத்திய அமைச்சரின் வீட்டில் 22 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆனால், 1000க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் அங்கிருந்து வெளியேறினர். மத்திய அமைச்சரின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.