போர் பதற்றம்! மத்திய உள்துறை செயலர் தலைமையில் அவசர கூட்டம்!
நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை நடத்தக்கூடிய நிலையில் மத்திய உள்துறை செயலர் கோவிந்த் தலைமையில் அவசர கூட்டம் நடைபெறவுள்ளது.
கடந்த 21ம் தேதி தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் மேல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். 4 பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர். பஹெல்காம் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்த நிலையில், மத்திய உள்துறை செயலர் கோவிந்த் தலைமையில் அவசர கூட்டம் நடைபெறவுள்ளது. நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை நடத்தக்கூடிய நிலையில் கூட்டம் நடைபெறவுள்ளது. அவசர கூட்டத்தில், நாட்டின் 244 மாவட்டங்களில் சிவில் பாதுகாப்பு குறித்து மதிப்பீடு உறுதி செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


