மணிப்பூரில் கலவரம் - வாக்குச்சாவடியில் ஆயுதம் தாங்கிய கும்பல் துப்பாக்கிசூடு

 
tn

மணிப்பூரின் தமான் போக்பி பகுதியில் வாக்குப்பதிவின் போது கலவரம் ஏற்பட்டுள்ளது.

tn
மணிப்பூர் மாநிலம் உள் மணிப்பூர் தொகுதியில் உள்ள தமான்போக்பி பகுதியில் இருக்கும் வாக்குச்சாவடியில் ஆயுதம் தாங்கிய கும்பல் சரமாரியாக துப்பாக்கிசூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. வாக்களிக்க வந்தவர்கள் சிதறி ஓடும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.


 ஹிரோய் ஷம்பா பகுதியில் வாக்குச்சாவடிக்கு அருகே துப்பாக்கிச்சூடு நடைபெற்றதால் அச்சமான சூழல் நிலவுகிறது.அத்துடன்  மேலும் எரோய்ஷம்பா பகுதியில் உள்ள வாக்குச்சாவடி சூறையாடப்பட்டதால் மணிப்பூரில் பதற்றம் நிலவுகிறது.