“நீங்கள் ஆணையிட்டால் உங்களை நான் காப்பாற்றுவேன்; நமது ஆட்சி உறுதி”- கமல்ஹாசன்

 

“நீங்கள் ஆணையிட்டால் உங்களை நான் காப்பாற்றுவேன்; நமது ஆட்சி உறுதி”- கமல்ஹாசன்

“சீரமைப்போம் தமிழகத்தை” எனும் பெயரில் மதுரை திடீர்நகர், மேலமாசிவீதி, அம்பிகா திரையரங்க நிறுத்தம், ஒத்தக்கடை ஆகிய பகுதிகளில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “மதுரைக்கு வணக்கம். பல பல நூற்றாண்டு பெருமை வாய்ந்த ஊர் மதுரை. காந்திக்கு உடை வடிவமைப்பு செய்தது மதுரை விவசாயி தான்.த ற்போது தூசியும் குப்பையும், மழைநீர் தேக்கமும் கழிவுநீர் ஓடும் மதுரையாக உள்ளது. மதுரையை மாற்றிக்கட்ட வேண்டும் என எம்ஜிஆர் கனவு கண்டார். மதுரையை மாற்றிக்காட்ட வேண்டும். எம்ஜிஆர் கனவை நிகழ்த்தாமல் உறங்கி கொண்டுள்ள ஊழல்வாதிகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் இது.

மதுரையை மாற்றிக்காட்ட வேண்டும் என்பதை உறுதிமொழியாக கொடுக்கிறேன். பெரியார் ஓட்டு அரசியல் செய்யவில்லை. அவரைப்போல வாழ்க்கையை கழித்துவிடலாம் என எண்ணிணேன். என்னை அவ்வாறு வாழ விட்டார்களா அதனால் தான் வந்தேன். ம்நான் வர வேண்டும் என முடிவெடுத்து பல மாதம் ஆகிவிட்டது. மதுரையை இரண்டாம் தலைநகராக மாற்ற வேண்டியது என் பொறுப்பு. வேலைவாய்ப்பு, கல்வி, உணவு என்பது உங்கள் உரிமை. அதை வழங்க வேண்டியது அரசின் கடமை.

“நீங்கள் ஆணையிட்டால் உங்களை நான் காப்பாற்றுவேன்; நமது ஆட்சி உறுதி”- கமல்ஹாசன்

மதுரை புரட்சிக்கு புதிய ஊர் அல்ல. மீண்டும் ஒரு புரட்சிக்கு நாம் தயாராக வேண்டும். நமது கட்சியில் ஐஏஎஸ், வக்கீல், டாக்டர்கள் நல்லவர்களின் களம் அரசியல். ஆனால் அதை ரவுடிகளின் களமாக மாற்றிவிட்டனர். எங்கள் அரசியல் மக்கள் அரசியல். மாணவர் அரசியல். மகளிர் அரசியல். தேடித்தீர்ப்போம் வா என்பதை போல திறமான அரசை உருவாக்க வேண்டும். குறைகளை தேடிவந்து தீர்க்க வேண்டும். வரும் முன் காக்க வேண்டும் அரசு. வந்த பின்பு காப்பது அல்ல அரசு.

உங்கள் ஏழ்மையை பார்த்து நான் செத்தால் அது நல்ல சாவு அல்ல. உங்களுக்கான வாழ்வு என் வாழ்வு. உங்கள் ஏழ்மையை ஒழிக்க வேண்டும். நேர்மையும் உண்மையும் எங்கள் லட்சியம், கொள்கை. விவசாயமும் மதுவும் ஒன்றாய் தோன்றியதே. எல்லோரும் குடியுங்கள் என ஐஏஎஸ் அதிகாரியை வைத்துக்கொண்டு அரசு சொல்வது நியாயமாகது. அத்தியாவசிய பொருட்களை போல மது விற்க கூடாது. அரசு மது விற்க கூடாது. நாங்கள் வந்தால் கல்வியும் ஆரோக்கியமும் மேலோங்கும். வேலை வாய்ப்பு என்பது ஆழமான வேர். லட்சோப லட்சப் பொறியாளர்களை படிக்க வைத்துவிட்டு வேலைவாய்ப்பு எப்படி சாத்தியமாகும். கூலிக்கு மாரடிக்கும் என்பதை மாற்றி தொழிலாளர்களாக மாற்ற வேண்டும். விவசாயிகள் பட்டத்திற்கு பெண்களும் பொருந்துவார்கள். ஆண்களுக்கு நிகராக பெண் விவசயிகளை உருவாக்க வேண்டும். பல்லில் இல்லாத சட்டங்களை பல் வைக்க என்னென்ன கையெழுத்து போட வேண்டுமோ அதை செய்வேன். நேர்மையின் சின்னம் எதுவென்று பாருங்கள். தன்னாலே கண்ணில் ஒரு ஒளி வரும். நீரின்றி உலகில்லை. நல்ல அரசை அமைக்க நாங்கள் போராடி வருகிறோம். கல்வி என்பது மாறிக்கொண்டே இருக்க வேண்டும். அறிவுக்கழுதைகளாக மாணவர்களை மாற்றக்கூடாது. சுமையாக மாற்ற கூடாது. அவர்களை பாதிக்கும் எந்த சட்டத்தையும் நீக்கலாம். கைதட்டலுக்காக இதை சொல்லவில்லை.

“நீங்கள் ஆணையிட்டால் உங்களை நான் காப்பாற்றுவேன்; நமது ஆட்சி உறுதி”- கமல்ஹாசன்

ஊழலை ஒழிப்பது என்பது தனி மனிதன் செய்வது அல்ல. நீங்களும் கைகோர்க்க வேண்டும். எனக்குள்ள கோபம் உங்களுக்கும் வேண்டும். அரசு கொள்ளையடித்த கஜானா மக்கள் நிரப்பியதே. நேர்மையை முதலீடாக வைக்க வேண்டும். மக்களும் நேர்மையை முதலீடு செய்ய வேண்டும். கட்சியில் நேர்மை மட்டுமே வாக்குறுதி. நேர்மையை நாங்கள் காப்பது போல இணைய உள்ள நீங்களும் காக்க வேண்டும். திருடுவதை நிறுத்தினாலே மூன்று தமிழ்நாட்டை சுபிட்சமாக வைத்துக்கொள்ளலாலாம். எங்கள் உத்தி நேர்மை தான். நேர்மையை கொண்டு தேர்தலில் வெல்வேன். எங்கள் நேர்மைக்கு பதிலடி அவர்களிடம் இல்லை. பேச வேண்டிய நேரம் இல்லை. செயல்படுத்த வேண்டிய நேரம். என் கரங்களை வலுப்படுத்துங்கள். நீங்கள் ஆணையிட்டால் நடத்திக்காட்டுவேன். ஆணை நீங்கள் இட வேண்டும். நான் விட கூடாது” எனக் கூறினார்.