சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால்,எந்த நோய் ஓடிப்போகும் தெரியுமா ?

 
sukku

பொதுவாக நம் உடலில் தோன்றும் பல்வேறு நோய்களுக்கும் சித்த வைத்தியத்தில் சிகிச்சை முறைகள் உள்ளது .அந்த வகையில் சுக்கு மூலம் நம் உடல் பெரும் பல்வேறு நன்மைகள் குறித்து இந்த பதிவில் நாம் காணலாம் 

1.சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.
2.சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும். 
3.சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வனைத்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடும் சளி மூன்றே நாட்களில் குணமாகும்.
4.சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும். 
5.சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும். 
6.சுக்குடன் சிறிது நீர் தெளித்து அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி குணமாகும்.
7.சுக்கு, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மந்த நிலை குணமாகும். 8.சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.
9.சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும். 
10.சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.