வெறும் வயிற்றில் இளஞ்சூடான நீர் அருந்துவதன் மூலம் என்ன நன்மைகள் ஏற்படும்னு தெரிஞ்சிக்கோங்க

 
effects of cold water after hot food effects of cold water after hot food

பொதுவாக நாம் தண்ணீர் ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் முதல் மூன்று லிட்டர் வரை குடித்தாலே நம் உடலில் பல்வேறு நோய்கள் வராமல் காக்கலாம் .அந்த வெந்நீரை  எப்படி குடித்தால் நம் உடலில் என்ன நன்மை உண்டாகும் என்று இந்த பதிவில் நாம் காணலாம் 
1.காலையில் வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் இளஞ்சூடான நீர் அருந்துவதன் மூலம் உடல் எடை குறையும். 2.காலையில் வெந்நீர் குடிப்பதன் மூலம் கழிவுகள் வெளியேறும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். சருமம் இளமையாகும். புத்துணர்வு கிடைக்கும். செரிமானம் சீராகும். மலச்சிக்கலைச் சரிசெய்யும்.
3.அந்த சூடு நீரில் வெந்தியம், தேன், துளசி, வில்வம், அருகம் புல், இவற்றில் ஏதேனும் ஒன்றை 2 லிட்டர் நீரில் ஊற வைத்து நீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் ஏராளம்.
4.வெதுவெதுப்பான தண்ணீரை குடித்தால் உடலின் மெட்டாபாலிசம் அதிகரிப்பதுடன், உண்ணும் உணவு விரைவில் செரிமானமாகி விடும். 
5.மேலும் இரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சியானது அதிகரித்து, இரத்தமானது அதிகப்படியான ஆக்சிஜனை கொண்டிருப்பதால் உடலானது எனர்ஜியுடன் இருக்கும்.
6.எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு வெந்நீர்  சிறந்த வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். முகமும் பொலிவுடன் இருப்பதுடன், பருக்கள் வருவது குறைந்துவிடும்.
7.தண்ணீரானது நமது உடலின் மூலை முடுக்குகளில் தங்கியுள்ள நச்சுக்கள் மற்றும் கிருமிகளை சிறுநீர் மூலமாக வெளியேற்றி, எப்போதும் நமது உடலின் சுறுசுறுப்புத் தன்மையை அதிகரிக்கச் செய்கிறது.
8.சுடு தண்ணீரை நாம் அதிகமாக குடித்தால், நமது உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கப்படும். 
9.இந்த சுடு நீர் மூலம்  நீரிழிவு நோய் மற்றும் அடிக்கடி ஏற்படும் தலைவலி பிரச்சனைகள் வராமல் தடுக்கப்படுகிறது.
10.நீரில் வெந்தயம் இரண்டையும் கலந்து குடிப்பதால், வெந்தய நீர் குளிர்ச்சியைத் தந்து, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். பெண்களுக்கு ஏற்படும்  வயிற்றுவலியை குறைக்கும்.