மஞ்சளை தினமும் உணவில் சேர்த்து கொள்வதால் என்ன நன்மை தெரியுமா ?
பொதுவாக மஞ்சள் எண்ணற்ற உடல் உபாதைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. பெரும்பாலான குடும்பங்களில், மஞ்சள் பால் இயற்கை மருந்தாக பயன்படுகிறது.
மஞ்சளுடன் இலவங்கப்பட்டை போன்ற மசாலா பொருட்களை பயன்படுத்துவது ஆரோக்கியம் . மஞ்சளின் குணப்படுத்தும் பண்புகள் அல்சைமர் சிகிச்சைக்கும் உதவுவது குறிப்பிடத்தக்கது.இந்த பதிவில் மஞ்சள் மூலம் குணமாகும் நோய்கள் பற்றி பார்க்கலாம்
1.மஞ்சள் சேர்த்து கொள்வது குளிர்கால சைனஸ், மூட்டு வலி, அஜீரணம், சளி மற்றும் இருமல் ஆகியவற்றிற்கு சிகிச்சை அளிக்கிறது.
2.மஞ்சள் சேர்த்து கொள்வது குளிர்கால தொற்று நோய்களில் இருந்து உடனடி நிவாரணம் பெற உதவும் .மேலும் , பால் மற்றும் தேநீர் போன்ற பானங்களில் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து பருகலாம்.
3.மேலும் மஞ்சளை தினமும் உணவில் சேர்த்து கொள்வதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க முடியும்.
4.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் ஒரு டம்ளர் பாலில் சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து குடிப்பதன் மூலம் கிருமிகளிடமிருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.
5.மஞ்சள் உணவுக்கு சுவை சேர்க்க மட்டுமின்றி செரிமானத்திற்கு உதவுகிறது.
6. மஞ்சள் ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகும், இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது.
7.மஞ்சள் உணவில் சேர்த்தால் கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகளின் செயல்பாடு மேம்படுகிறது
8.மேலும் மஞ்சள், குழந்தைகளுக்கு ஏற்படும் மூக்கடைப்புக்குச் சிறந்த மருந்து.
9.விரலி மஞ்சளை நல்லெண்ணெய் விளக்கில் சுட்டு அந்தப் புகையை மூக்கின் வழியாக உள்ளே இழுக்க மூக்கடைப்பு மற்றும் இரைப்பு கட்டுப்படுத்தப்பட்டு ஆரோக்கியம் சிறக்கும் .
10.மஞ்சள் , தொண்டை புண்களுக்கு நிவாரணம் அளிக்கிறது. குளிர்காலத்தின் ஆரம்ப கால பருவ நோயாக காய்ச்சல், சளிக்கும் மஞ்சள் நல்ல மருந்து


