வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்துவந்தால் எந்த நோய் குணமாகும் தெரியுமா ?

 
vazhai poo vazhai poo

பொதுவாக இந்த மருத்துவ மூலிகை வாழைப்பூவை உணவில் சேர்த்தால் என்ன நன்மை கிடைக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம் 
1.ஒரு சில பெண்களுக்கு மாதவிலக்கு சமயங்களில் அதிக உதிரப்போக்கு இருக்கும் .அப்படிப்பட்ட பெண்கள்
வாழைப்பூ சாறுடன்,மிளகு தூள் மற்றும் பனங்கற்க்கண்டு சேர்த்து குடித்தால் நலம் பெறுவர் 
2.மேலும் அப்படி அந்த வாழைப்பூ கஷாயத்தை குடித்தால் மாதவிலக்கு வயிற்று வலி நீங்கும்.
3.மேலும் வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்துவந்தால் மலட்டு தன்மை மறைந்து குழந்தை பிறக்கும் .
4.சில பெண்களுக்கு வெள்ளை படுத்தல் இருக்கும் .வாழை பூவை ரசம் செய்து சாப்பிட்டால் பெண்களின் வெள்ளைப்படுதல் நீங்கும்.
5.வாழை பூ பெண்களின் கர்ப்பப்பைக்கு பலமளித்து குழந்தை பேருக்கு வழி செய்யும் 
6.ஒரு சிலருக்கு கை காலில் எரிச்சல் இருக்கும் ,அவர்கள் வாழைப்பூவை இடித்து சிற்றாமணக்கு
எண்ணெயில் வதக்கி, ஒற்றடமிட்டால் எரிச்சல் போகும். கை,கால் எரிச்சல் காணாமல் போகும் 
7.சிலருக்கு உதிர கடுப்பு இருக்கும் .அவர்கள் வாழைப் பூவிலிருந்து சாறு எடுத்து அத்துடன் பனங் கற்கண்டு 
சேர்த்து சாப்பிட்டால் உதிரக் கடுப்பு உடனே ஓடி விடும்  .