அகத்தி கீரையை வைத்து தலை குளித்தால் கிடைக்கும் பலன்கள்
பொதுவாக அகத்திக் கீரையில் உள்ள இலை, பூ, காய், பட்டை மற்றும் வேர் என அனைத்தும் மருந்தாகப் பயன்படுகின்றன.. இதன் மற்ற நன்மைகளை பட்டியலிட்டுள்ளோம் படித்து பயன் பெறுங்கள்
1.அகத்திக் கீரையைப் பச்சையாக மென்று, சாற்றை விழுங்கினால் தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி நீங்கி நம் ஆரோக்கியத்துக்கு சிறப்பை தருகிறது .

2.இரத்தப் பித்தம் மற்றும் இரத்த கொதிப்பு ஆகியவை அகத்திக்கீரைகுணப்படுத்தும் .
3.அகத்திக் கீரை இதயத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது.
4.இந்த கீரை இரத்த சோகையை நீக்குகிறது. பொலிவிழந்த தோலிற்கும், கருவளையங்கள் நிறைந்த முகத்திற்கும் அகத்திக்கீரை ஒரு நல்ல தீர்வாக அமைந்து ஆரோக்கியம் தருகிறது
5.அகத்தி கீரையை அரைத்து உச்சந்தலையில் 1 மணிநேரம் வைத்திருந்து குளித்தால், உடல் உஷ்ணம் குறைந்து விடும். .
6.அகத்திக் கீரையை அரைத்து ஆறாத புண்கள் மீது தடவினால், விரைவில் புண்கள் ஆறி நன்மை பயக்கும்
7.அகத்தி கீரையில் நிறைய வைட்டமின் சி உள்ளது. இது இரத்த குழாய்கள் தடிமனாவதை தடுக்கிறது. ;


