எல்லா உணவிலும் மஞ்சள் தூள் மற்றும் வெந்தயத்தை சேர்த்தால் எந்த நோயை தடுக்கலாம் தெரியுமா?
பொதுவாக விட்டமின் பி 12குறைபாடு போன்ற காரணங்களால் நரம்பு தளர்ச்சி நோய் உண்டாகிறது .இந்த நோய் முதுமையில் அதிகமாய் பாதித்து அல்சைமர் என்ற ஞாபக மறதி நோயில் கொண்டு போய் விட்டு விடும் .இதை ஆரம்பத்திலேயே வராமல் தடுக்க சில எளிய வழிகள் உள்ளன .அது பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.இந்த நோய் வந்தால் ஆரம்பத்தில் கை கால்களில் எரிச்சல் ஏற்படும் .கோழியின் ஈரலில்தான் இந்த வைட்டமின் பி அதிகம் உள்ளது ,அதனால் சைவம் சாப்பிடுவோருக்கு இந்த நோய் வரும் வாய்ப்பு அதிகம்

2.அதனால் 40 வயதிலிருந்தே தினம் ஏதாவது ஒரு பழம் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் .மேலும் இந்த நோய் வராமலிருக்க சில வழிகள்
3.பொன்னாங்கண்ணி கீரை மற்றும் மன தக்காளி கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துக்கணும்
4.தினம் இரவில் சாதிக்காய் பொடி கொஞ்சம் சாப்பிடலாம்
5.தேநீரில் லவங்கப்பட்டை போட்டுக் குடிப்பது, நரம்புகளுக்கு பாதுகாப்பு தரும்
6.நரம்பு பாதுகாப்புக்கு, எல்லா உணவிலும் மஞ்சள் தூள், வெந்தயத்தை மறக்காமல் சிறிதளவாவது சேர்க்க வேண்டும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது .
7.தாமரை தண்டு அல்லது தாமரை விதையை தினமும் சாப்பிட்டு வந்தாலும் இந்த நரம்பு தளர்ச்சி பிரச்சனை எந்த வயதிலும் நம்மை தாக்காது .


