கீரையுடன் எந்தெந்த உணவெல்லாம் சேர்த்து உண்ண கூடாது தெரியுமா ?

 
manathakkali keerai

பொதுவாக மழை, வெயில் என அனைத்துக் காலங்களிலும் கீரைகளை சாப்பிடலாம். ரத்தசோகை பிரச்னை உள்ளவர்கள் வாரம் இருமுறை, முருங்கைக் கீரை சூப் வைத்து, அதில் எலுமிச்சைச் சாறை சிறிதளவு சேர்த்து சாப்பிடலாம்.ஆனால் சில உணவு பொருட்களுடன் கீரையை சேர்த்து சாப்பிட கூடாது .சில கீரைகள் உடலுக்கு பல மருத்துவ நன்மை தர கூடியது அவை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்

1.பொதுவாக இரவில் கீரை சாப்பிடவே கூடாது. கீரைகளில், நார்ச்சத்துக்கள் மிகுதியாக இருப்பதால், எளிதில் செரிமானம் ஆகாது.

greens

2.மேலும் எந்த கீரையுடன் முட்டை, பால், தயிர், அசைவம் போன்றவற்றை சேர்த்து சமைக்கக்கூடாது.

3.ஏனெனில் கீரை சாத்வீக உணவு என்பதால் இவை ஒன்றாக சேர்ந்தால் மலச்சிக்கலையும், வயிற்றுப் பிரச்னைகளையும் உருவாக்கி நம்மை படுத்தி எடுத்து விடும் .

4.கீரை சமைக்கும்போது கீரையைவிட பருப்பின் அளவு குறைந்திருப்பதே நல்லது. சமமாகவோ, அதிகமாகவோ இருக்கக்கூடாது.

5.முருங்கை கீரை ரத்த சோகையை விரட்டும் .. முருங்கை மரத்தில் கிடைக்கும் அனைத்தும் உடலுக்கு ஆரோக்கியமே. அதிகச் சத்துக்கள் நிறைந்தது முருங்கைக் கீரை.

6. முருங்கை கீரையில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி மற்றும் சி, இரும்புச் சத்துகள், நார்சத்துக்கள் உள்ளன. அதிக அளவில் முருங்கை கீரையில் இருப்பவை இரும்புச் சத்தும், வைட்டமின் சி-யும் உள்ளது.

7. முருங்கை கீரை இரும்புச் சத்தும் வைட்டமின் சியும் சேர்ந்த கலவை, ரத்தத்தை உற்பத்தி செய்யும்.

8.ரத்த சோகை உள்ளவர்களுக்குமுருங்கை கீரை சிறந்த மருந்து.

9.முருங்கை கீரை நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

10.வாரம் இருமுறை முருங்கை கீரை சாப்பிட்டுவந்தால், முடி உதிர்தல் நிற்கும். இளநரையைப் போக்கும். கண் பார்வைத் திறன் அதிகரிக்கும். உடல்சூடு தணியும்.