மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட எந்த நோய் குணமாகும் தெரியுமா ?

 
ghee

பொதுவாக சில பாட்டி வைத்தியம் நமக்கு நோயை குணமாக்கும் ,இந்த பாட்டி வைத்தியங்களை பின் பற்றினால் பக்க விளைவு தரும் மருந்து மாத்திரைகளிடமிருந்து தப்பிக்கலாம்
1.
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொண்டால் நன்றாக பசிக்கும்
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவி வந்தால் தீராத நெஞ்சு  சளி குணமாகும்.

2.ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தராமல் தொல்லை கொடுத்து வந்த தலைவலி குணமாகும்.
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடித்து வந்தால் பல நாட்களாக இம்சை கொடுத்து வந்த வயிற்று வலி நீங்கும்.

stomach
3.மிளகை வறுத்துப் பொடி பண்ணி திரிகடி பிரமாணம் தேனில் கலந்து சாப்பிட்டால் நிற்காமல் போகும் பேதி குணமாகி ஆரோக்கியம் கிடைக்கும்
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட்டு வருவோருக்கு பல நாள் தொல்லை தந்த  சீதபேதி குணமாகும்.
 
4.வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய சமூலம் அரைத்த விழுது எலுமிச்சங்காயளவு எடுத்து ½ படி பசுவின் பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் சாப்பிட்டு வந்தால்  கரப்பான், வண்டுக்கடியால் ஏற்பட்ட விஷம்   நீங்கி ஆரோக்கியம் மேம்படும் .
4 அல்லது 5 வெங்காயத்தை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வர பித்தம் குறைந்து நல்ல நிவாரணம் கிடைக்கும் .
5.இலவங்கப்பட்டை ஒன்றரை பலம் வால்மிளகு கால் பலம் பொடித்து 3  வேளை நெய்யில் கலந்து  சாப்பிட நீண்ட நாட்களாக தொல்லை தந்த இருமல் தீரும்..
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர பல நாள் அவஸ்த்தை கொடுத்த மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.