தேங்காய் பால் எந்த நோயை குணமாக்கும்னு தெரிஞ்சிக்கோங்க

 
coconut

பொதுவாக உணவு முறைகள் மூலம் வயிற்றுப்புண்ணிலிருந்து மிக விரைவில் நிரந்தரமான குணம் பெறலாம்.
அதனால் அல்சரை விரட்ட தவிர்க்கவேண்டியவை பற்றி இப்பதிவில் நாம் காணலாம்

1.அதிக காரத்தன்மை உள்ள உணவுகளை தவிர்த்து விடவேண்டும்.

ulcer
2.பசி அதிகமாக இருக்கும் போதோ அல்லது பசிக்கும் போதோ  சூப் போன்றவற்றை பருகக் கூடாது. இது அமில சுரப்பை அதிகப்படுத்தும். புகை பிடித்தல் மது பழக்கம் போன்றவற்றை கைவிடவேண்டும்.
3.காலையில் வேக வைத்த இடியாப்பம், இட்லி, புட்டு போன்றவற்றுடன் தேங்காய் பால், தேங்காய் துருவல், தேங்காய் சட்னி ஆகியவற்றை  சேர்த்துக்கொள்ளலாம்.
4.தேங்காய் பால் வயிற்றுப்புண்களை ஆற்றுவதில்  மிகுந்த பயனளிக்கக் கூடியது. மேலும்  பித்தத்தையும் குறைக்கும்.
5.காலை உணவுடன் அல்லது தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வரலாம். வாழைப்பழம் வயிற்றுப் புண்களை குணமாக்கும்.
6.மதியம் மோர் கலந்த சாதத்தை சாப்பிட வேண்டும்.
7.மோர் புண்களை ஆற்றும், வயிற்று எரிச்சல் போன்றவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கும் மேலும் ஜீரணத்தை மேம்படுத்தும்.
8.கொதிக்கும் நீரில் சிறிதளவு சீரகம் சேர்த்து மூடி வைத்து ஆறியபின் பருகலாம் இதனால் ஜீரண கோளாறுகள் குறையும். வயிற்றுப்புண் விரைவில் குணமாகும்.