சர்க்கரை நோயாளிகளுக்கு ஏராளமான நண்மைகளை வாரி வழங்கும் இந்த அரிசி .
பொதுவாக இன்று இளம் வயதிலேயே ரத்த அழுத்தம் ,கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சினைகள் உண்டாகி இதனால் இதயம் பாதிக்கப்பட்டு இதய நோய்க்கு பலியாகும் கொடுமை அரங்கேறி வருகிறது .இந்த மாதிரி நோய்களின் தாக்குதலிலிருந்து சிவப்பு அரிசி நம்மை காக்கிறது .இந்த அரிசியின் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.புரதச்சத்து நிறைந்த இந்த அரிசியை சாப்பிடுவதன் மூலம் உடலின் சீரான இயக்கத்திற்கும், பிராணவாயு உடலின் அனைத்து திசுக்களுக்கும் சென்று சேர்க்கிறது.
2.மேலும் இந்த அரிசி குடல் புற்று நோய் வராமல் நம்மை பாதுகாக்கிறது ,

3.சிவப்பு அரிசியில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுவதால் இது நமக்கு மலசிக்கல் இல்லாமல் வைக்கிறது
4.சிவப்பு அரிசியில் சுகரை கண்ட்ரோல் செய்யும் பண்பு உள்ளதால் இது நீரிழிவை அதிகரிக்க செய்யாது.
5.இந்த அரிசியை சாப்பிட்ட உடன் உடலில் இரத்தத்தில் சர்க்கரையை கலக்காமல் பொறுமையாக கலக்கும். இதனால் சர்க்கரை அளவு அதிகரிக்காது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்
6.சிவப்பு அரிசி சாப்பிடுபவர்களுக்கு டைப் 2 நீரிழிவும் கட்டுக்குள் வரும்
7.இதிலிருக்கும் குறைந்த கிளைசெமின் குறியீடு சர்க்கரை அளவை கட்டுப்படுத்த செய்வதால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு எப்போதும் ஏரளமான நண்மைகளை வாரி வழங்கும் .


