தேவையில்லாமல் தண்ணீர் குடிப்பதால் நம் உடலுக்கு உண்டாகும் தீமைகள்
பொதுவாக தண்ணீரை சிலர் தாகமெடுத்தால் குடிப்பது உண்டு .இன்னும் சிலர் சும்மாவே அடிக்கடி குடித்து கொண்டிருப்பது உண்டு .இப்படி தேவையில்லாமல் தண்ணீர் குடிப்பதால் நம் உடலுக்கு உண்டாகும் தீமைகள் பற்றி இந்த பதிவில் நாம் விரிவாக பார்க்கலாம்
1.பொதுவாக கோடை காலத்தில் அதிகமாக தண்ணீர் குடிப்போம்.
2.ஆனால் சிலர் அதிகமாக எல்லா காலத்திலும் தண்ணீர் குடிப்பார்கள்.
3.இப்படி குடிப்பதால் உடலில் நீர் அதிகமாகக் சேரும் .இப்படி நீர் குவிவதால், அனைத்து உறுப்புகளின் செல்களிலும் நீரின் சதவீதம் அதிகரிக்கிறது.
4.இப்படி நீர் சேர்வதால் உடல் உபாதைகள் ஏற்படுகிறது.

5.அதிகமான தண்ணீரால் தலைச்சுற்றல், தலைவலி, குழப்பம்,போன்ற தொல்லைகள் உண்டாகும்
6.ஓவரா தண்ணீர் குடிப்பதால் அதிகரித்த இரத்த அழுத்தம்.
7.இதயம் வேகமாக துடிப்பது போன்ற உபாதைகள் உண்டாகும் ,
8. மேலும் அதிக தண்ணீரால் சிறுநீரகத்தின் சுமை அதிகரித்து சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுப்பது போன்ற பல பிரச்சினைகள் உருவாக வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.
9.எனவே தாகமெடுக்கும்போது மட்டும் அளவாக தண்ணீர் குடித்தால் ஆரோக்கியமாய் வாழலாம்


