இந்த அறிகுறிகள் இருந்தா அலட்சிய படுத்தாதிங்க -அது கேன்சரா இருக்கலாம்
பொதுவாக கேன்சர் என்பது சில நேரத்தில் இது எலும்பு பகுதியில் கட்டி போல தோன்றலாம் .இதை மருத்துவரிடம் சென்று காமித்தால் அவர் பயாப்சி செய்து இதை கண்டறிவர் .இதன் அறிகுறிகள் பற்றி நாம் இப்பதிவில் காணலாம் .
1.ஆரம்பத்தில் வலி எல்லா நேரத்திலும் இருக்காது. இரவில் அல்லது எலும்பைப் பயன்படுத்தும் போது, நடைபயிற்சி போன்ற போது இது மோசமாகலாம்.
2.காலப்போக்கில், வலி தொடர்ந்து மாறலாம், மேலும் அது செயல்பாட்டில் மோசமாகலாம். சில எலும்பு கட்டிகள் அப்பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்

3.பொதுவாக 10 வயது முதல் 30 வயதுள்ளோருக்கு முதல் நிலை புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
4.புற்று நோய் ஏற்பட்ட பகுதியில், வீக்கம், வலி மற்றும் அப்பகுதியை அசைக்க முடியாமல் இருப்பது.
5.உடல் பலவீனம், இளம் வயதில் மூட்டு வலி வந்தால் அலட்சியமாக இருக்காமல் மருத்துவருடன் ஆலோசிப்பது நல்லது.
6.பெரியவர்களுக்கு ஏற்படுகின்ற சார்கோமா வகை எலும்பு புற்றுநோய் கடுமையாக பரவும் வகையைச் சார்ந்தது.


