தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த நேரும் அதிசயம்
பொதுவாக பழங்கள் நம் உடலுக்கு பல மருத்துவ நன்மைகளை கொடுக்க கூடியது .அந்த வகையில் செவ்வாழை பழத்தில் பல ஆரோக்கிய குணங்கள் அடங்கியுள்ளது .இப்படி அதிக ஆரோக்கியம் தரும்
செவ்வாழையில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.இந்த செவ்வாழையின் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்
1.செவ்வாழை சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. .
2.கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.
3. இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்.
4.பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளுக்கும் செவ்வாழைப்பழம் சிறந்த பழமாகும் .
5.சிலருக்கு பல் தொடர்புடைய நோய்கள் உண்டாகும் .இது ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.
6.சிலருக்கு சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு ஏற்படும் .இது போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும்.
7.சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும், செவ்வாழைப் பழத்தை தொடர்ந்து ஏழுநாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும்.
8. சிலருக்கு நரம்பு தளர்ச்சிஇருக்கும் . தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.
9.. குழந்தை இல்லாத தம்பதிகள், தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும்.
10.தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அறிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்.


