மல்லிகைப் பூ எண்ணெய்யைத் தேய்த்துக் குளித்து வந்தால் என்ன நேரும் தெரியுமா ?

 
jasmine jasmine

பொதுவாக பூக்களில் நம் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான பல்வேறு மூல பொருட்கள் உண்டு .
உதாரணமாக உடலில் வீக்கம் உள்ள பகுதிகளில் மல்லிகைப்பூவை அரைத்து பூசிவர வீக்கம் மறையும். மேலும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பில் பால் கட்டிக்கொண்டு அவதிப்படுவார்கள். அந்த நேரத்தில்  மல்லிகைப்பூவை அரைத்து மார்பின்மீது பூசிவந்தால் பால் கட்டுதல் நீங்கி உடல் நிலை சரியாகும் .மேலும் மல்லிகை பூ மூலம் நாம் அடையும் பயன் பற்றி இந்த பதிவில் நாம் காணலாம் 
1.பொதுவாக மல்லிகைப் பூவிலிருந்து எண்ணெய்  எடுக்கப்படும்.இந்த  எண்ணெய்யைத் தேய்த்துக் குளித்து வந்தால் உடலுக்கு குளிர்ச்சி உண்டாகி ஆரோக்கியம் பிறக்கும் . 
2.மல்லிகைப் பூவின்  எண்ணெய் மூலம் சரும எரிச்சல் நீங்கும். மேலும் சரும பாதிப்புகளைப் போக்கும்.
3.இம்மியூனிட்டி பவர் குறைவாய் இருப்போர் மல்லிகைப் பூக்களை தினமும் சாப்பிட்டு வந்தால் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 
4.  மல்லிகைப் பூவின்  எண்ணெய் மூலம் அடிக்கடி சளியினால் ஏற்படும் மூச்சடைப்பு, இருமல் போன்ற தொந்தரவுகள் நீங்கும்.
5.மல்லிகை மொட்டுக்களை புண்கள் காயம்பட்ட இடங்கள் கொப்புளங்கள், வீக்கங்கள் போன்றவற்றிற்கு அரைத்து மேல் பூச்சாக பூசினால் உடனே நிவாரணம் கிடைக்கும் 
6.மல்லிகையின் வேரை காயவைத்து பொடிசெய்து அதனுடன் வசம்புத் தூளை சேர்த்து எலுமிச்சம் பழச்சாறு விட்டு தேய்த்து குளித்தால் தோல் நோய்கள் நீங்கும்.
7.மல்லிகையின் வேர் மூலம் கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும். 
8.மல்லிகையின் வேர் மூலம் கண் பார்வை நரம்புகளில் வறட்சித் தன்மையைப் போக்கி பார்வையை தெளிவாக்கும். கண் எரிச்சல், பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
9.மல்லிகையின் வேர் பித்தத்தை தணித்து சீராக்கும். தலையில் நீர் கோர்த்தல், ஒற்றைத் தலைவலி போன்றவற்றிற்கு மல்லிகை எண்ணெய் சிறந்தது. 
10.புண்களை ஆற்றும் தன்மை மல்லிகை எண்ணெய்க்கு உண்டு. மல்லிகைப் பூவை நன்கு கையில் வைத்து கசக்கி நெற்றியில் தடவினால் தலைவலி நீங்கும்.