வயசானாலும் அழகும் ,இளமையும் அப்படியே இருக்க இந்த பேஸ் மாஸ்க் போடுங்க

 

வயசானாலும் அழகும் ,இளமையும் அப்படியே இருக்க இந்த பேஸ் மாஸ்க் போடுங்க

ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் வெந்தய பொடி, தயிர், லெமன் ஜூஸ், ரோஸ் வாட்டர், தேன் எல்லாவற்றையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் மிக்சியில் அரைத்து  கொள்ள வேண்டும். இது வழுவழுப்பான பேஸ்டாக நமக்கு கிடைத்துவிடும். இதை ஒரு பவுலில் மாற்றிக் கொண்டு உங்களுடைய முகத்தில் கீழிருந்து மேல் பக்கமாக தடவிக் கொள்ளுங்கள். முகம் தவிர கை கால்களிலும் இந்த பேக்கை போட்டுக்கொள்ளலாம்.

வயசானாலும் அழகும் ,இளமையும் அப்படியே இருக்க இந்த பேஸ் மாஸ்க் போடுங்க

 இந்த ஃபேஸ் மாஸ்க்கை போட்டுக் கொண்டு ஃபேனுக்கு அடியில் அமர வேண்டாம். முகத்தில் இந்த ஃபேஸ் மாஸ்க் இருக்க பிடிக்கும் வரை நிறைய உலர வைத்து விடாதீர்கள். 80% இந்த ஃபேஸ் மாஸ்க் முகத்தில் காய்ந்ததும், வெதுவெதுப்பான தண்ணீரை கொண்டு முகத்தை கழுவி விட வேண்டும். இந்த ஃபேஸ் பேக் 80 சதவிகிதம் உலர பொதுவாக பத்தில் இருந்து பதினைந்து நிமிடங்கள் எடுக்கும். ஃபேன் காற்றில் அமர்ந்தால் சீக்கிரம் காய்ந்து விடும் அல்லவா? தினமும் இந்த ஃபேஸ் பேக்கை முயற்சி செய்து பார்க்கலாம். ஒரு முறை போட்ட உடனேயே உங்களுடைய முகத்தில், நன்றாக வித்தியாசம் தெரியும்.

முகத்திலும் உடம்பிலும் தழும்புகள் உண்டாக காரணம் முகப்பருக்கள், கரும்புள்ளிகள், அம்மை கண்ட வடுக்கள் போன்றவற்றால் தான். இதை போக்க  இப்படி செய்து பாருங்கள்

வெந்தயத்தை ஒரு கைப்பிடி அளவு எடுத்துகொண்டு அதனோடு 5 மடங்கு 5 கப் அளவுநீர் விட்டு 10 நிமிடங்கள் ஊறவிட வேண்டும். பிறகு அதை அடுப்பில் மிதமான தீயில் வைத்து இலேசாக் சூடேற்றி வடிகட்டி வைத்து கொள்ளவும். இந்த நீரை கொண்டு முகத்தை கழுவ வேண்டும். தினமும் இப்படி செய்துவந்தால் சரும சுருக்கங்கள் மறையும். தழும்புகள் நிறம் மறையும்.

​தழும்புகள் மறைவதற்கு

வெந்தயத்தை தேவையான அளவு இரவு ஊறவைக்க வேண்டும். காலையில் அந்த நீரோடு வெந்தயத்தை வேகவைக்க வேண்டும். பிறகும் நீரை வெளியேற்றாமல் அதை கொண்டே வெந்தயத்தை அரைத்து முகம் மற்றும் உடலில் தழும்புகள் இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். 30 முதல் 40 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். தினமும் இதை செய்து வர வேண்டும். இதனால் முகப்பருக்கள் இருந்தாலும் கரும்புள்ளிகள் இருந்தாலும் தழும்புகளோடு அவையும் மறையக்கூடும். இதை தொடர்ந்து செய்துவந்தால் 2 வாரங்களில் பலன் தெரியும். .