"படுதோல்வி... பூஜ்யமாகும் அதிமுக... எடப்பாடியே பதவி விலகு" - கொந்தளிக்கும் கலகக்குரல்!

 
எடப்பாடி

ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆளுங்கட்சியான திமுகவிற்கே சாதகமாக முடிந்துள்ளது. மிகப்பெரிய பிரமாண்ட வெற்றி என்று தான் சொல்ல வேண்டும். பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிற்கு 10% இடங்கள் கூட கிடைக்காமல் படுதோல்வி கிடைத்துள்ளது. 140 மாவட்ட கவுன்சிலர்களில் 138 பேர் திமுக கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள் தான். அதிமுகவிற்கு 2 தான் கிடைத்திருக்கிறது. அதேபோல 1381 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக கூட்டணிக்கே 1000க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைத்துள்ளது. அதிமுக 300ஐ கூட தொட முடியாத பரிதாப நிலையை அடைந்துள்ளது. 

அவர் இருந்தபோதும் அதிமுக தோல்வியைச் சந்தித்துள்ளது''- எடப்பாடி பழனிசாமி  பதிலடி! | nakkheeran

இந்த படுதோல்வி குறித்து அதிமுக முன்னாள் செய்தித்தொடர்பாளர் புகழேந்தி கூறுகையில், "தமிழ்நாட்டு ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நான் முன்பே கூறியது போல் 80 சதவீதம் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவின் தோல்வி மிகுந்த வேதனையளிக்கிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் மாபெரும் வெற்றி பெற்ற இயக்கமாக இருந்த அதிமுக தேய்ந்து வருகிறது. கட்சி இயக்கம் முற்றிலும் சிதைந்துள்ளது. கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மீதான அதிருப்தியால் தான், திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக மிகப்பெரிய தோல்வி அடைந்துள்ளது. 

அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவது எப்போது? புகழேந்தி பதில் |  nakkheeran

வெற்றி தோல்வி சகஜம் என்றாலும் கூட அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துச் செல்லி, நாம் மீண்டும் வெற்றி பெறுவோம் என்று அறிக்கை கொடுத்து இருக்க வேண்டும். ஆனால் திமுக கொல்லைபுறமாக வந்து வென்று விட்டார்கள் என்று சொல்லி, வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து கூறவில்லை. அதிமுக நன்மை அடைய வேண்டுமெனில் பழனிசாமி கட்சியிலிருந்து வெளியேற வேண்டும். பழனிசாமி வெளியே சென்றால் தான் கட்சியைக் காப்பாற்ற முடியும். ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும், கட்சிக்கும் அவர் துரோகம் செய்துள்ளார். அதிமுக தோல்வியின் காரணமாக தொண்டர்கள் துவண்டு போய் உள்ளனர். 

12 மணி நேரமா பால் காய்ச்சினார்..?' - அ.தி.மு.க-விலிருந்து புகழேந்தி  நீக்கப்பட்டதன் பின்னணி என்ன?| What was the background behind the removal of  Pugalendhi from the AIADMK?

ஓபிஎஸ்ஸை நினைத்து நான் வேதனைப்படுகிறேன். இன்னும் கட்சியின் மீது பற்றோ, வேகமோ இல்லாவிட்டால், புதுச்சேரியில் அதிமுக பூஜ்ஜியமாகிவிட்டது போல, தமிழ்நாட்டிலும் சரிவை சந்திக்கும். பழனிசாமியை ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கவில்லை என்றால், தொடர்ந்து அதிமுக தோல்வியடையும். பழனிசாமி, வேலுமணி, தங்கமணி தாமாகவே கட்சியில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும். இல்லையெனில், தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தை நடத்துவேன். கட்சியை காப்பாற்ற உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருக்கிறோம். கொடநாடு கொலை வழக்கில் பழனிசாமியை கைது செய்ய வேண்டும்” என்றார்.