இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி இந்தூருக்கு மாற்றம்

 
indore ground

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தர்மசாலாவில் இருந்து இந்தூருக்கு மாற்றப்பட்டுள்ளது. 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, வருகிற 17ம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதேபோல் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தர்மசாலாவில் நடைபெறுவதாக இருந்தது. 

Ind Practice

இந்நிலையில், இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தர்மசாலாவில் இருந்து இந்தூருக்கு மாற்றப்பட்டுள்ளது.  3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இமாசலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் மார்ச் 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த மைதானத்தின் அவுட்பீல்டு விளையாடுவதற்கு உகந்தவாறு இல்லை. எனவே இந்த போட்டி இந்தூருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளது.  தர்மசாலாவில் கடந்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகு எந்த போட்டிகளும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.