பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவின் ஆண் குழந்தை உயிரிழப்பு!!
பிரபல கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல கால்பந்து வீரர் மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் ஜார்ஜினா தம்பதிக்கு இரட்டை குழந்தை பிறந்தது. ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரட்டை குழந்தை பிறந்த நிலையில் தற்போது அவரின் ஆண் குழந்தை உயிரிழந்ததாக அவர் தனது இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கூறியுள்ள அவர், "எங்கள் குழந்தையின் மரணத்தை ஆழ்ந்த சோகத்துடன் அறிவிக்கிறோம். எந்த ஒரு பெற்றோரும் உணரக்கூடிய மிகப்பெரிய வலி இது. எனினும் எங்கள் பெண் குழந்தை பிறந்தது மட்டுமே இந்த தருணத்தை ஓரளவு நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ வலிமை அளிக்கிறது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வழங்கப்பட்ட அனைத்து பராமரிப்பு மற்றும் ஆதரவிற்கு எங்களின் நன்றி. இந்த கடினமான நேரத்தில் நாங்கள் பேரழிவிற்கு ஆளாகி தனிமையில் இருக்க விரும்புகிறோம் . எங்கள் மகன் எங்களின் தேவதை . நாங்கள் எப்போதும் உன்னை நேசிப்போம் என்று சோகத்துடன் பதிவிட்டுள்ளார்.
ரொனால்டோ மற்றும் ஜார்ஜினா தம்பதிக்கு ஏற்கனவே ஜூனியர் ,மேடியோ என்ற இரண்டு ஆண் குழந்தைகளும், ஈவா மற்றும் அலனா என்ற இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்த சூழலில் ரொனால்டோவின் மனைவி மீண்டும் கர்ப்பம் தரிக்க, இரட்டை குழந்தை பிறக்க போவதை உறுதிப்படுத்தினர். இந்த சூழலில் ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.