கால்பந்து ஜாம்பவான் பீலேவின் உடல்நிலை கவலைக்கிடம்? - ரசிகர்கள் சோகம்

 
pele

பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் பீலேவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கால்பந்து உலகக் கோப்பையை வென்ற பிரேசில் அணியில் மூன்று முறை இடம்பிடித்தவர் பீலே. 82 வயதாகும் பீலேவுக்கு, பெருங்குடலில் சிறிய புற்றுநோய் கட்டி இருப்பது கண்டறியப்பட்டு கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறுவை சிகிச்சை செய்து அந்த கட்டி அகற்றப்பட்டது.
 இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக நலமுடன் இருந்து வந்த பிலேவின் உடல்நிலை கடந்த சில நாட்களாக மோசமடைந்ததைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார். இந்த தகவலை அவரது மகள் கெல்லி நஸிமென்டோ தெரிவித்திருந்தார்.

நுரையீரல், இதய பிரச்னை தொடர்பான சிகிச்சைகளுக்கான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பீலேவை மருத்துவர்களின் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், பீலேவின் இதயம் மற்றும் சிறுநீரகம் தீவிரமாக பாதிப்பு அடைந்து இருப்பதாகவும், இதனால் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பீலேவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.