பஞ்சாபின் அதிரடியை சமாளிக்குமா கொல்கத்தா ? - இரு அணிகளும் இன்று பலப்பரீட்சை

 
KKR vs PBKS


ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், இன்றைய லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

15-வது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி கடந்த 26-ம் தேதி தொடங்கியது. இதுவரை 7 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் இன்று 8-வது லீக் போட்டி நடைபெறுகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இப்போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், மயங் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

kkr

தனது முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. ஆனால் அடுத்ததாக நடைபெற்ற பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அந்த போட்டியில் கொல்காத்தா அணி 128 ரன்களில் சுருண்டது. இதனால் இந்த போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப கொல்கத்தா அணி முனைப்பு காட்டி வருகிறது. 

Odean Smith

இதேபோல் முதல் போட்டியில் பெங்களூரு அணியுடன் மோதிய பஞ்சாப் அணி 206 என்ற இமாலய இலக்கை எட்டிப்பிடித்து பெங்களூரு அணிக்கு அதிர்ச்சி அளித்தது. அந்த போட்டியில் பேட்டிங்கில் மிரட்டிய பானுகா ராஜபக்சே, தவான், ஷாருக்கான், ஓடியன் ஸ்மித் ஆகியோர் இந்த போட்டியிலும் மிரட்டுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேபோல் 3 நாட்கள் தனிமைப்படுத்துதல் காலத்தை நிறைவு செய்துள்ள வேகப்பந்துவீச்சாளர் காகிசோ ரபாடா இந்த போட்டியில் களமிறங்கவுள்ளது பஞ்சாப் அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.