ஐபிஎல் இன்றைய போட்டியில் டெல்லி-ராஜஸ்தான் பலப்பரீட்சை

 
dcvsrr

ஐபில் கிரிக்கெட் தொடரில் இன்றைய லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

15-வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 26-ம் தேதி தொடங்கியது. இதுவரை 33 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று 34வது லீக் போட்டி நடைபெறவுள்ளது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இப்போட்டியில், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

rr

ராஜஸ்தான் அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் 4ல் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு நல்ல ரன்ரேட் உள்ளதால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது. இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற அந்த அணி முனைப்பு காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பேட்டிங்கை பொறுத்தவரை அந்த அணியில், கேப்டன் சஞ்சு சாம்சன், ஜாஸ் பட்லர், சிம்ரன் ஹெட்மயர், படிக்கல் உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கின்றனர். இதேபோல் பந்துவீச்சில் டிரெண்ட் போல்ட், அஸ்வின், சஹால் உள்ளிட்டோர் பலம் சேர்க்கின்றனர். 

dc

டெல்லி அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் 3ல் வெற்றியும் 3 போட்டிகளில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. பேட்டிங்கை பொறுத்தவரையில் அந்த அணியில், டேவிட் வார்னர், பிரித்வி ஷா, கேப்டன் ரிஷப் பந்த் உள்ளிட்டோர் பலம் சேர்க்கின்றனர். இதேபோல் பந்துவீச்சில் அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், கலீல் அகம்து உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கின்றனர்.