ரசிகர்கள் உற்சாகம் - ஐ.பி.எல். தொடரில் இன்று 2 போட்டிகள்

 
IPL

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. முதல் போட்டியில் மும்பை - ராஜஸ்தான் அணியும், இரண்டாவது போட்டியில் குஜராத் - டெல்லி அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

15-வது சீசன் ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 26-ம் தேதி தொடங்கியது. இதுவரை 8 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. பிற்பகல் 3.30 மணிக்கு மும்பையில் உள்ள DY பட்டேல் மைதானத்தில் தொடங்கும் முதல் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

mi vs rr

மும்பை அணி தனது முதலாவது போட்டியில் டெல்லி அணியுடன் தோல்வியை தழுவியது. பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும் பந்துவீச்சில் கோட்டைவிட்டது. இதனால் அணியை வழுப்படுத்தும் முயற்சியில் அந்த அணி ஈடுபட்டுள்ளது. ராஜஸ்தான் அணி தனது முதலாவது போட்டியில் ஐதராபாத் அணியை கதிகலங்க வைத்தது. 210 ரன்கள் குவித்த ராஜஸ்தான் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தியது. 

GTvsDC

இதேபோல் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு போட்டியில் கார்த்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன. குஜராத் அணி தனது முதலாவது போட்டியில் லக்னோ அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதேபோல் டெல்லி அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இரண்டு பலமான அணியும் இன்று மோதுவதால் இப்போட்டி மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.