சூர்யகுமார், கே.எல்.ராகுல் அசத்தல் - தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது இந்தியா

 
IND

இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. முதலாவதாக டி20 தொடர் நடைபெற்று வரும் நிலையில், முதல் டி20 போட்டி நேற்று இரவு திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்கள் முடிவில 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்தது அதிகபட்சமாக கேசவ் மகராஜ் 41 ரன்கள் எடுத்தார். 

suryakumar ind

இதனையடுத்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் தடுமாறினாலும், பின்னர் சிறப்பாக விளையாடியது. கேப்டன் ரோகித் சர்மா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்த நிலையில், விராட் கோலி 3 ரன்னில் நடையை கட்டினார். இதனையடுத்து சிறப்பான கூட்டணி அமைத்த கே.எல்.ராகுல், சூரியகுமார் யாதவ் இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற  செய்தனர். இந்திய அணி 16.4 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சூரியகுமார் யாதவ் 50 ரன்களும், கே.எல்.ராகுல் 51 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  இதன்மூலம் 3 போட்டி கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலையில் உள்ளது.