இந்தியா-தென் ஆப்ரிக்கா 2வது டி20 போட்டி - டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன

 
ind vs sa

கவுகாத்தியில் நாளை நடைபெறவிருக்கும் இந்தியா -தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. முதலாவதாக டி20 தொடர் நடைபெற்று வரும் நிலையில், முதல் டி20 போட்டி கடந்த 28ம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி கவுக்காத்தியில் நாளை இரவு நடைபெறவுள்ளது. 

இந்நிலையில், கவுகாத்தியில் நடைபெறவிருக்கும் இந்தியா -தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனையாகி விட்டதாக அஸ்ஸாம் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. டிக்கெட்டுகள் விற்கப்பட்ட வெளிப்படையான முறை கிரிக்கெட் ரசிகர்களிடையே உற்சாகத்தை அதிகரித்துள்ளது என்று அஸ்ஸாம் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார்.