வெற்றிநடை போடுமா இந்தியா ? - இன்று 4வது டி20 போட்டி

 
ind vs rsa

இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெறுகிறது. 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 9ம் தேதி முதல் வருகிற 19ம் தேதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன. இதுவரை 3 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் அதில் தென் ஆப்ரிகா முதல் இரண்டு போட்டியிலும், இந்தியா ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதேபோல் கடந்த 14ம் தேதி நடைபெற்ற 3வது டி20 போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் 4வது டி20 போட்டி     ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேசன் மைதானாத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது. 

ind vs rsa


 
5 போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்ரிக்கா அணி முன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடலாம். ஆகையால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற தென் ஆப்ரிக்கா அணி முனைப்பு காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேபோல் கடந்த போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி அதே உத்வேகத்துடன் இன்றைய போட்டியிலும் வெற்றி பெற தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.