டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த இந்தியா - பிளேயிங் லெவன் இதுதான்!

 
ind vs zim toss

ஜிம்பாப்பே அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 

ஜிம்பாப்பே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி கடந்த 18ம் தேதி நடைபெற்ற நிலையில், அதில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. ஏற்கனவே முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது. இதேபோல் கடந்த போட்டியில் தோல்வி அடைந்த ஜிம்பாப்பே அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இன்றைய போட்டி இந்திய நேரப்படி நண்பகல் 12.45 மணிக்கு அங்குள்ள ஹரார் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து ஜிம்பாப்பே அணி முதலாவதாக பேட்டிங்க் செய்யவுள்ளது. 

இந்திய அணி வீரர்கள் விவரம்: சுப்மன் கில், ஷிகர் தவான், இஷான் கிஷான், கே.எல்.ராகுல்(கேப்டன்), தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன், அக்சர் பட்டேல், சர்தூல் தாகூர், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் உள்ளிட்டோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.