இங்கிலாந்து தொடரில் இருந்தும் ராகுல் விலகல் ?

 
kl rahul

காயம் காரணமாக தென் ஆப்ரிக்கா தொடரில் இருந்து விலகிய கே.எல்.ராகுல் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இருந்தும் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்திய அணி தற்போது தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த 3 போட்டிகளில் 2ல் தென் ஆப்ரிக்காவும், ஒன்றில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளது. தற்போது இந்திய அணி ரிஷப் பந்த் தலைமையில் விளையாடி வரும் நிலையில், கே.எல்.ராகுல் தான் முதலாவதாக கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட திடீர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியதை அடுத்து ரிஷப் பந்த் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து இந்திய அணி அயர்லாந்து செல்கிறது. அங்கு 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. முதல் டி20 போட்டி ஜூன் 26ம் தேதியும், இரண்டாவது டி20 போட்டி ஜூன் 28 ஆகிய தேதியும் நடைபெற உள்ளது. அந்த அணிக்கு ஹர்த்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

kl rahul

இதனை தொடர்து இந்திய அணி இங்கிலாந்து செல்லவுள்ளது. கடந்த ஆண்டு நடக்க இருந்த இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இப்போட்டி வரும் ஜூலை 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை பர்மிங்காமில் உள்ள மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்த டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் கே.எல்.ராகுலும் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில், கே.எல். ராகுலுக்கு இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் குணமாக அதிக நாட்கள் ஆகும் என்பதால் அவர் டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெஸ்ட் போட்டிக்கு பின்னர் இந்திய அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது குறிப்பிடதக்கது.