இந்திய அணியுடன் எம்.எஸ்.தோனி - புகைப்படங்கள் வைரல்

 
ms dhoni

இங்கிலாந்தில் முகாமிட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியுடன் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 7ம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்றிரவு இங்கிலாந்தில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் முதலாவதாக பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலாவதாக பேட்டிங்க் செய்து விளையாடிய இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடி காட்டியது. இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரவிந்திர ஜடேஜா 46 (29) ரன்களும், கேப்டன் ரோஹித் சர்மா 31 (20) ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் கிரிஸ் ஜோர்டன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

india

இதனையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே திணறியது. இங்கிலாந்து அணி 17 ஓவர்களில் 121 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்-அவுட் ஆனது. இந்திய பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 இதன் மூலம் 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரையும் 2க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 


இந்நிலையில்,  இங்கிலாந்தில் உலகப் பிரபலமான விம்பிள்டன் கிரான்ட்சலாம் டென்னிஸ் போட்டி கண்டு களிப்பதற்காக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இங்கிலாந்திற்குச் சென்றுள்ளார். இங்கிலாந்தில் இருக்கும் மகேந்திர சிங் தோனி, போட்டி நிறைவடைந்த பிறகு இந்திய வீரர்களைச் சந்தித்து பேசிய புகைப்படைங்களை, பி.சி.சி.ஐ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் மகேந்திர சிங் தோனி இஷான் கிஷான் மற்றும் ரிஷப் பந்த் உள்ளிட்டோருடன் பேசிக்கொண்டிருப்பது போன்ற புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.