பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்காக டெல்லி கொண்டு செல்லப்படுகிறார் ரிஷ்ப் பந்த்?

 
rishap

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்காக ரிஷ்ப் பந்த் டெல்லிக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் டெல்லியில் இருந்து சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டம் ரூர்கீக்கு சொகுசு காரில் சென்றார். அந்த காரை ரிஷப் பந்தே இயக்கிச் சென்றுள்ளார்.  டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் ஹம்மத்பூர் ஜல் என்ற இடத்திற்கு அருகே ரூர்கியின் நர்சன் எல்லை பகுதியில் அதிவேகமாக சென்றபோது, நேற்று அதிகாலை 5.30 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது. பிஎம்டபிள்யூ காரை ரிஷ்ப்  பண்ட்டே  ஓட்டிச் சென்றதாகவும், மிக வேகமாக காரை ஓட்டிச் சென்றதாலும், பனி மூட்டம் காரணமாக விபத்து ஏற்பட்டதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் அவரது தலை, முதுகு, காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு, டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்காக ரிஷ்ப் பந்த் டெல்லிக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிஷப் பந்த் உடல்நிலையை கண்காணிக்க டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (டிடிசிஏ) குழு மேக்ஸ் மருத்துவமனைக்கு செல்வதாகவும், தேவைப்பட்டால் அவரை டெல்லிக்கு  மாற்றப்போவதாகவும் டிடிசிஏ இயக்குநர் ஷியாம் சர்மா கூறி உள்ளார்.