அரையிறுதியில் தோல்வி... கதறி அழுத ரோகித் சர்மா - ரசிகர்கள் வேதனை
டி20 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், இதனால் வேதனை தாங்காமல் ரோகித் சர்மா கதறி அழுத வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
8வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. அடிலெய்டு ஓவலில் நேற்று நடைபெற்ற 2-வது அரைஇறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்தும் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் முதலாவதாக பந்துவீச்சை தேர்வு செய்தார்.இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 63 ரன்கள் எடுத்தார்.இதை தொடர்ந்து 169 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களம் புகுந்த அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடியின் அதிரடியால் இங்கிலாந்து அணி 16 ஓவர்களில் 170 ரன்கள் அடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
The ppl who are blaming Rohit Sharma for this world cup will be the same ppl who will praise him for other cup in future.
— मल्हार✨ (@godbole_arpit) November 10, 2022
Mark my words!#RohitSharma𓃵 pic.twitter.com/P2pErtC7mV
இதன் மூலம் இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு சென்ற நிலையில், இந்திய அணி வெளியேறியது. இந்நிலையில் இங்கிலாந்து அணி இடம் தோல்வி அடைந்ததை தாங்க முடியாமல் ரோஹித் சர்மா கதறி அழுதார். போட்டி முடிவடைந்ததும் வீரர்கள் அமர்ந்திருக்கும் இருக்கை பகுதிக்கு சென்ற ரோகித் சர்மா கண்ணீர் விட்டு அழுது தனது வேதனையை வெளிப்படுத்தினார்.