டி 20 உலக கோப்பை - நெதர்லாந்து அணிக்கு 163 ரன்கள் இலக்கு

 
SRI

டி 20 உலக கோப்பை தொடரின் தகுதி சுற்றில், நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 162 ரன்கள் குவித்துள்ளது. 

8-வது டி 20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த  16ம் தேதி தொடங்கிய போட்டி நவம்பர் 13-ம் தேதி வரை  நடைபெறவுள்ளது. மொத்தம் 16 அணிகள் இதில் விளையாடவுள்ளன. இதில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இதேபோல் தகுதி சுற்றில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஜிம்பாப்வே, நமீபியா, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 8 அணிகளில் தகுதி பெறும் 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.  

இந்நிலையில், தகுதி சுற்றில் ஏ பிரிவில் இன்று கடைசிகட்ட லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. அதில் இலங்கை அணி, நெதர்லாந்துடன் மோதுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதனையடுத்து முதலாவதாக பேட்டிங் செய்த அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக குஷல் மெண்டிஸ் 79 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து 163 ரன்கள் என்ற இலக்கை நோக்கி நெதர்லாந்து அணி விளையாடி வருகிறது.