சென்னை-மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டி - 19ம் தேதி டிக்கெட் விற்பனை

சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை வருகிற 19ம் தேதி நடைபெறவுள்ளது.
ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் 18வது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த சீசனிலும் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ளன. இந்த சீசனுக்கான மெகா ஏலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. இதில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு வாங்கப்பட்டனர். இதனையடுத்து ஐபிஎல் அணிகள் தங்களது வீரர்களை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. சென்னை அணியின் முதல் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 23ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் சென்னை அணி தனது பரம எதிரியான மும்பை அணியை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில், சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை வருகிற 19ம் தேதி நடைபெறவுள்ளது. சேப்பாக்கத்தில் வரும் 23ம் தேதி நடைபெறவுள்ள சென்னை - மும்பை இடையிலான முதல் போட்டிக்கான டிக்கெட் வரும் 19ம் தேதி காலை 10.15 மணியளவில் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் டிக்கெட்டை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.