கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் டிஸ்சார்ஜ்!!

 
tn

உலகக்கோப்பை தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர் கொண்ட நிலையில் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இதை தொடர்ந்து  நாளை ஆப்கானிஸ்தானை இந்தியா அணி எதிர்கொள்கிறது.  இதற்காக இந்திய அணி டெல்லி சென்று அடைந்துள்ளது. 

tn

இந்த சூழலில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில்  சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.  ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நாளை நடைபெற உள்ள போட்டியில் ஷுப்மன் கில் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

tn

இந்நிலையில்  உடல் நிலை சீரான நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வீட்டில் இருந்தபடியே ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும் வரும் 14ம் தேதி நடைபெறவுள்ள இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டியிலும் சுப்மன் கில் பங்கேற்பது சந்தேகம் என்றே தெரிகிறது.