சென்னை அணி ஒரு குடும்பத்தை போன்றது - ரஹானே நெகிழ்ச்சி

 
rahane

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு குடும்பத்தை போன்றது எனவும், அணியில் உள்ள சிறப்பான சூழல் போட்டிகளில் நேர்த்தியாக விளையாட உதவுகிறது எனவும் ரஹானே கூறியுள்ளார். 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 157ரன்கள் எடுத்தது.  இதையடுத்து களமிறங்கிய சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் மும்பை அணின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். சென்னை அணி 18. 2 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய ரஹானே 27 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

csk

போட்டி முடிந்த பிறகு செய்தியாளர் சந்திப்பு ரஹானே கூறியதாவது:- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்னை ஏலத்தில் எடுத்தபோது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரருக்கும் சி.எஸ்.கே-வில் எப்படி மரியாதை கொடுப்பார்கள் என பல வீரர்கள், இதற்கு முன்பே என்னிடம் கூறியுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு குடும்பத்தை போன்றது. டோனி தலைமையில் பல போட்டிகள் விளையாடி உள்ளேன். சி.எஸ்.கே-வில் டோனி தலைமையில் கீழ் விளையாடியது இதுவே முதல்முறை. அணியில் உள்ள சிறப்பான சூழல் போட்டிகளில் நேர்த்தியாக விளையாட உதவுகிறது. இவ்வாறு கூறினார்.