கோப்பையையும், மக்கள் மனங்களையும் வென்றெடுத்து விட்டார் தோனி - ஜெயக்குமார் டுவீட்!

 
jayakumar

ஐந்தாவது முறையாக கோப்பையையும் மக்கள் மனங்களையும் வென்றெடுத்து விட்டார் தோனி என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெறுவதாக இருந்த நிலையில் மழையின் காரணமாக போட்டி நேற்றைக்கு  ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பில்டிங்கை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 214 ரன்களை குவித்தது.  இதையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே  மழையின் காரணமாக ஆட்டத்தை பாதியிலேயே நிறுத்தியது. பின்னர் சிஎஸ்கே அணி 15 ஓவர்களில் 171 ரன்கள் எடுக்க வேண்டும் என்று அறிவித்த நிலையில்  கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவை என்று நிலை ஏற்பட்டது. ஐந்தாவது பந்தை ஜடேஜா சிக்ஸர் ஆக மாற்றினார் . இதனால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் கடைசி பந்தை பவுண்டரியாக்கி வெற்றியை சிஎஸ்கே வசப்படுத்தினார். இதனால்  5 விக்கெட்டுகள்  வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

இந்நிலையில், கோப்பையை வென்ற சென்னை அணிக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். எப்போதும் போல எல்லோரையும் கடைசி நிமடங்களில் BP மாத்திரை போட வைத்த போட்டி.. வியூகங்கள் எதிரணியை மட்டுமல்ல ரசிகர்களையும் வியப்படைய செய்கிறது.  ஐந்தாவது முறையாக கோப்பையையும் மக்கள் மனங்களையும் வென்றெடுத்து விட்டார் தோனி! தோனி ஒரு சகாப்தம்! வாழ்த்துக்கள். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.