இந்தியா-பாகிஸ்தான் போட்டி - அகமதாபாத்தில் ஓட்டல் ரூம்களின் விலை கிடுகிடு உயர்வு

 
indvspak

இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறும் அக்டோபர் 15ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் ரூம்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது.

13-வது 50 ஓவர் (ஒருநாள்) உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற அக்டோபர் மாதம் 05ம் தேதி முதல் நவம்பர் மாதம் 19ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 10ம் அணிகள் பங்கேற்கவுள்ளன.  உலகக்க்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. முதல் போட்டி இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே, அக்டோபர் 5ம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தியாவின் முதல் ஆட்டம், அக்டோபர் 8ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்  நடைபெறவுள்ளது. இறுதிப்போட்டி நவம்பர் 19ம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 15ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

indvspak

இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறும் அக்டோபர் 15ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் ரூம்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது.    ஆடம்பர ஓட்டல்களில் ஒருநாள் ரூம் வாடகை 5 ஆயிரம் ரூபாய் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை அகமதாபாத் நகரில் இருக்கிறது. தற்போது அந்த வாடகை 40 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அகமதாபாத் நகரில் உள்ள ஐடிசி ஓட்டல்களின் வெல்கம் ஓட்டலில் ஜூலை 2-ந்தேதி ரூம் வாடகை 5,699 ரூபாய். அதுவே அக்டோபர் 15-ந்தேதி 71,999 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எஸ்.ஜி. ஹைவேயில் உள்ள ரெனாய்ஸ்சான்ஸ் அகமதாபாத் ஓட்டலில் அக்டோபர் 15-ந்தேதி 90,679 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்த்தப்பட்ட நிலையிலும் ரூம்கள் அனைத்தும் புக் ஆகிவிட்டதாக தெரிகிறது.