அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்தியா!

 
rohit

உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. 

உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. பிற்பகல் சரியாக 2 மணிக்கு இறுதிப் போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. நடப்பு உலக கோப்பை போட்டியில் தோல்வியே சந்திக்காத அணியாக திகழும் இந்திய அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. இதேபோல் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று 6வது முறையாக கோப்பையை கைப்பற்ற ஆஸ்திரேலிய அணி முனைப்பு காட்டி வருகிறது. இந்த நிலையில், இறுதிப் போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.  டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் காரணமாக இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்து வருகிறது.

aus

இந்த நிலையில், உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். சுப்மன் கில் 4 ரன்களில் வெளியேறினார். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கேப்டன் ரோகித் சர்மா 47 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்ரேயஸ் ஐயர் வந்த வேகத்திலேயே வெளியேறினார். இதன் காரணமாக இந்திய அணி 11 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 24 ரன்களுடனும், கே.எல்.ராகுல் ஒரு ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.